கீழரண்சாலை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் ஜூலை 1 மின்தடை

திருச்சி கீழரண்சாலை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில்  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 1) மின்தடை செய்யப்படுகிறது.

திருச்சி கீழரண்சாலை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில்  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 1) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தென்னூர் நகரியச் செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கீழரண்சாலை  துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 1) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழரண்சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி மார்க்கெட், கிருஷ்ணாபுரம் சாலை, சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியார் தெரு, ஆண்டார்தெரு, பட்டர்வொர்த் சாலை, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை,  குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன் பகுதிகளில் காலை 9.,45 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com