ரயிலில் அடிபட்டு தஞ்சை பெண் சாவு

திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் மாரனேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மனைவி தமிழரசி (55). திருவெறும்பூர் வந்திருந்த இவர் வெள்ளிக்கிழமை காலை சோழகம்பட்டி பகுதியில் ரயில்பாதையைக் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எர்ணாகுளம் விரைவு ரயிலில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com