ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.63.69 லட்சம் கிடைக்க பெற்றது.
ஸ்ரீரங்கம் திருக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை கருடாழ்வார் சன்னதியில் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில், ரொக்கமாக ரூ.63 லட்சத்து 69 ஆயிரத்து 781ம், தங்கம் 160 கிராமும், வெள்ளி 1570 கிராமும், வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்க பெற்றது.
இப்பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியினர் மற்றும் கோயில் பணியாள்ர்கள் ஈடுபட்டனர்.