திருவானைக்கா இரணியம்மன் கோயிலில் நவ.30-இல் குடமுழுக்கு

இரணியம்மன் திருக்கோயிலில் வரும் நவ.30-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இரணியம்மன் திருக்கோயிலில் வரும் நவ.30-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருவானைக்கா கோயில் உதவி ஆணையர் கோ. ஜெயப்பிரியா கூறியது:
திருவானைக்கா கோயிலின் எல்லை தெய்வமான இரணியம்மன் கோயிலின் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் முதலில்
இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி வரும் 28-ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கி, 30-ஆம் தேதி இரணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
திருவானைக்கா கோயிலுக்கான குடமுழுக்குப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அதன் குடமுழுக்கு தேதியும் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com