துறையூர் வட்டம், கீரம்பூர் உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
கீரம்பூர் கிளை நூலகம்,வாசகர் வட்டம் சார்பில் 50- ஆவது தேசிய நூலக வார விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியர்கள் 80 பேர் பங்கேற்றனர். போட்டியை வாசகர் வட்டத் தலைவர் ஜெ.ஜெயபால் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ந. ராமகிருஷ்ணன் போட்டிகளை நடத்தினார். வென்றவர்களுக்கு கீரம்பூர் நூலகர் ச. நூர்அகமது பரிசுகள் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் ஆசிரியர்கள், வாசகர் வட்டத்தினர், மாணவமாணவிகள் பங்கேற்றனர்.