துறையூரில் வெள்ளிக்கிழமை இரவு இடிதாக்கியதில் ஒரு வீட்டின் சுவரும், மின் சாதனங்களும் சேதமடைந்தன.
துறையூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடி மின்னல் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் பெரம்பலூர் செல்லும் சாலையோரத்தில் இருந்த காய்ந்த மரம் சாய்ந்தது.
அதேபோல சொரத்தூர் சாலை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியருகே பாரதி நகரில் ஆர். பட்டாபிராமனின் வீட்டுச் சுவரின் ஒரு பகுதி இடிதாக்கி பெயர்ந்து விழுந்தது. மேலும் வீட்டில் இருந்த ஏசி, யூபிஎஸ் இன்வர்டர், பிரிட்ஜ், மின் விசிறி, மின்கம்பி, சுவிட்சுகள் சேதமடைந்தன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வீட்டுக்குள் செல்லும் தண்ணீர்க் குழாய் சேதமடைந்ததில் நீர் விரயமானது.
மேலும் அதே பகுதியில் ஓய்வு பெற்ற வங்கிப் பணியாளர் துரை வீட்டில் கணினி, மைனர் பாலமுருகன் வீட்டில் ஏசி, உணவக உரிமையாளர் ஆர். நடராஜன், ஓய்வு பெற்ற நகராட்சி வரி வசூலர் ஆர். சந்திரமௌலீஸ்வரன் ஆகியோர் வீடுகளில் வைபை மோடம் மற்றும் சுவிட்சுகள் சேதமடைந்தன. சிலருடைய வீடுகளிலில் யூபிஎஸ் இன்வர்டர்களும் சேதமடைந்தன.