திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென பாலத்திலிருந்து கீழே குதித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கே.கே. நகர் போலீஸார், முதியவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.