கார் மோதி இளைஞர் சாவு

துறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதி இளைஞர் உயிரிழந்தார்.

துறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதி இளைஞர் உயிரிழந்தார்.
புலிவலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சதீஷ்(27).  வெளியூரில் தங்கி பணி செய்யும் இவர் மாரியம்மன் கோயில் விழாவுக்காக  சொந்த ஊர் வந்திருந்தார்.  
சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரமங்கலம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த சதீஸ் துறையூரிலிருந்து திருவெள்ளரை சென்ற வாடகைக் கார் மோதி உயிரிழந்தார். புலிவலம் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் ராஜ்கண்ணு(35)விடம் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com