திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் உலக புவிநாளையொட்டி ஏப்ரல் 22 ஆம் தேதி வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து மையத்தின் திட்ட இயக்குநர் இ.கி. லெனின் தமிழ்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக புவி நாளையொட்டி புவி கோளை காப்போம் என்ற தலைப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி அண்ணா அறிவியல் மையத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி முற்பகல் 11 மணிமுதல் 12 மணி வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் 0431- 2332190, 2331921 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.