ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு

தொட்டியத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தாலிச் செயின் புதன்கிழமை பறிக்கப்பட்டது. 

தொட்டியத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தாலிச் செயின் புதன்கிழமை பறிக்கப்பட்டது. 
முசிறி சாந்தா நகரைச் சேர்ந்த சந்தரமூர்த்தி மனைவி செல்வி (45). தொட்டியம் அருகே கொசவம்பட்டி அரசு  மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து செவிந்திப்பட்டி - தொட்டியம் சாலையில்  நடந்து சென்றார். 
இவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், செல்வி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். 
இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளைஞரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com