தொட்டியத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தாலிச் செயின் புதன்கிழமை பறிக்கப்பட்டது.
முசிறி சாந்தா நகரைச் சேர்ந்த சந்தரமூர்த்தி மனைவி செல்வி (45). தொட்டியம் அருகே கொசவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து செவிந்திப்பட்டி - தொட்டியம் சாலையில் நடந்து சென்றார்.
இவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், செல்வி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளைஞரைத் தேடி வருகின்றனர்.