உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி ரயில்வே அருங்காட்சியகத்தை புதன்கிழமை இலவசமாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஆர். ஆய்வு தலைமை வகித்தார். திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் வந்தனர்.
அருங்காட்சியகத்தை புதன்கிழமை பார்வையிட்ட பொதுமக்கள் விளையாட்டு ரயிலில் பயணித்தனர். மேலும், அங்குள்ள விளையாட்டுச் சாதனங்களிலும் கட்டணமின்றி விளையாட அனுமதிக்கப்பட்டனர். அருங்காட்சியகத்தில் உள்ள 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடிகாரம், முந்தைய காலங்களில் ரயில்வே துறையில் பயன்படுத்திய தண்டவாளம், சிக்னல் விளக்கு, ரயில்வே கேட் பூட்டு சாவிகள், மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் மற்றும் ரயில் , ரயில் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது.