முசிறி அருகே விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
முசிறி அருகே கொள்ளுக்கட்டிபாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி செல்வபிரியா (22). திருமணமான இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாள்களுக்கு மனமுடைந்து விஷம் குடித்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முசிறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.