துறையூர் பகுதியில் விதிமீறலில் ஈடுபட்டதாக மின் நுகர்வோர் இருவருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
துறையூர் மின்சார வாரிய கோட்டப் செயற்பொறியாளர் பி. ஆனந்தகுமார் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், களப்பணியாளர்கள் 11 குழுக்களாக பிரிந்து துறையூர், எரகுடி பகுதியில் உள்ள 555 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மின் இணைப்பில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இரண்டு மின்நுகர்வோரிடமிருந்து ரூ.14,333 அபராதம் வசூலிக்கப்பட்டது.