திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வராசு (முசிறி), பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்) மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில், வரும் ஏப். 27 இல் முசிறியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சியினர் திரளாகப் பங்கேற்பது, ஏப். 28 ஆம் தேதி முசிறி வரும் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.