துறையூரில் வடக்குவெளி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்றது.
பேரணியை முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. தொடக்கி வைத்தார். துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. செல்வகுமார், துறையூர் காவல் ஆய்வாளர் எல். மனோகரன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ஏ. சலீம் ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
மணப்பாறையில்... மணப்பாறையில் பேரணியை குற்றவியல் நடுவர் எம். தர்மபிரபு தொடங்கி வைத்தார். மணப்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் முத்துகார்த்திகேயன், வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முசிறியில்... பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் முசிறி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன், முசிறி பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.