காவிரி நீர்வரத்தால் திருவானைக்கா கோயில் ராமர் தீர்த்த தெப்பக்குளம், ஸ்ரீரங்கம் கோயில் நெடுந்தெரு தெப்பக்குளம் ஆகியவை நிரம்பியுள்ளன.
எப்போதும் வறண்டே காணப்படும் இக்குளங்களில் ஓவ்வொரு முறையும் தெப்ப உற்சவம் நடைபெறும்போது போர்வெல் அமைத்து குழாய் மூலம் தெப்பக்குளத்தில் நீரை நிரப்புவர். தற்போது காவிரி,கொள்ளிடத்தில் அதிக நீர் வருவதால் இங்குள்ள குளங்களும் நிரம்பி வருகிறன. இந்தக் குளத்தில் வரும் நீர் தூம்பு வழியாக அருகில் உள்ள கோயில் குளங்களுக்கு செல்கிறது. இதன் காரணமாக கோயில் குளங்கள் தற்போது நிரப்பி விட்டன.