"போக்சோ' சட்டத்தில் ஒருவர் கைது

திருச்சி, பாலக்கரை கீழகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் உடல் மற்றும் மனதளவில் கடந்த சில

திருச்சி, பாலக்கரை கீழகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் உடல் மற்றும் மனதளவில் கடந்த சில நாள்களாக மாற்றம் இருந்தது. அது குறித்து கேட்டபோது சிறுவனுக்கு எதையும் விளக்கி கூறத் தெரியவில்லை. 
இதையடுத்து பெற்றோர் குழந்தையிடம் அவனது போக்கிலேயே மெதுவாக விசாரித்தபோது  அதே பகுதியைச் சேர்ந்த பாபா என்கிற சக்திவேல் (50) என்பவர், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து  புகாரின்பேரில், கோட்டை அனைத்து மகளிர் காவல் காவல் நிலைய போலீஸார் போக்சோ (சிறுவர் சிறுமியர் வன்கொடுமை) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சக்திவேலை சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com