திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி வளர்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் என். குமரன் தலைமை வகித்தார். லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது குறித்துப் பேசினார். அதற்கான ஆலோசனைகளை ஓய்வு பெற்ற தலைமையாசியர் ஏ.ஆர். ரெங்ககராஜன், நவநீத சுகுமார், நெஸ்ட் மெட்ரிக் பள்ளித் தாளார் மரியவிக்டர் உள்ளிட்டோர் கூறினர். லால்குடி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.