திருச்சி மாவட்ட ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி இ.பி.சாலையில் உள்ள நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும். இந்த சிகிச்சையானது கத்தியின்றி, ரத்தமின்றி மேற்கொள்ளப்படும். இந்த கருத்தடை செய்து கொள்ளும் தந்தையர்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும்.
இவைத்தவிர ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும். தகுதியான ஆண்கள் இந்த நவீன குடும்ப அறுவை சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.