ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் இடத்தில் அமைந்திருக்கும் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அகற்றிடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலங்களில் கோயில் இடங்களில் உள்ள கடைகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள 18 கடைகளுக்கு கடைகளை அகற்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை காலக்கெடு வழங்கப்படுவதாகக் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிவரை கடைகள் அகற்றப்படாமல் இருந்தன.