பல்கலை. பட்டமளிப்பு விழாவில் போலியாக தங்கப்பதக்கம் பெற முயன்ற மாணவி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் போலியாக தங்கப்பதக்கம் பெற மாணவி ஒருவர் முயன்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் போலியாக தங்கப்பதக்கம் பெற மாணவி ஒருவர் முயன்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  புதன்கிழமை  34 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 
இந்த விழாவுக்கான ஒத்திகை செவ்வாய்க்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பல்கலைக்கழகப் பதிவாளர் ஜி. கோபிநாத்துக்கு செல்லிடப்பேசியில் ஒரு தகவல் கிடைத்தது. அந்த தகவலில்  பட்டமளிப்பு விழாவில்   சிதம்பரத்தைச் சேர்ந்த சோ. ராஜகுமாரி,  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முழு நேரப் பணியாளராகப் பணியாற்றி வரும் போது, எப்படி திருவையாறு  சம்ஸ்கிருத மற்றும்  தமிழ்கல்விக் கல்லூரியில் மாணவியாகப் பயின்றதாக  காண்பித்து, பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகப் பணியாளர் எப்படி கல்லூரி மாணவியாக இருக்க முடியும், எனவே அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. மணிசங்கரும், பதிவாளர் கோபிநாத் கணபதியும்,  ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரியை அழைத்து விசாரித்த போது, அது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதோடு, புதன்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்க வரக்கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பப்பட்டார். 
இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com