துறையூர் மின் துறை அலுவலகம் அருகேயுள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதி ஆகியவற்றில் இருந்து திருச்சி சாலை ஓர மேற்குப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் குவிந்து குப்பை மேடாகியுள்ளன.
இதில், வியாழக்கிழமை மதியம் திடீரென தீப்பிடித்ததில் தங்க நகர், மின் துறையினர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு இடையே காய்ந்திருந்த செடி கொடிகள், முள் மரங்கள் ஆகியவற்றில் தீ பரவியது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
தகவலறிந்து துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கே. பாஸ்கரன் தலைமையில் பாலசந்திரன், மாதேஸ், சண்முகம் உள்ளிட்ட பணியாளர்கள் சென்று ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.