விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

முசிறி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

முசிறி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறியை அடுத்த தும்பலம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன்கள் முருகேசன் (48), அண்ணாவி (60) பெரியசாமி (54). இவர்கள் மூவருக்கும் இருந்த நிலத்தகராறில், கடந்த 7-ஆம் தேதி அன்று, முருகேசன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து பெரியசாமி, அண்ணாவி மகன் சத்தியராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அண்ணாவியை (60), வெள்ளிக்கிழமை இரவு முசிறி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com