திருச்சி தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
என்.ஐ.டி. இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்த மையத்தை திறந்து வைத்தார். பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது ஏ.டி.எம். மையம் இதுவாகும்.
இதன் மூலம் என்.ஐ.டி. யில் படிக்கும் மாணவ, மாணவிகள் 5500 பேர் பலன் பெறுவர். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைமை விடுதிக் காப்பாளர் முனைவர் பி.ராமதாஸ், விடுதிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். அறிவழகன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.