திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையேயான உறவுமுறை மேம்படுத்துதல் குறித்த முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மலையடிப்பட்டி தெரசா தொடக்கப்பள்ளியில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக அறிவியல் முதுகலை ஆராய்ச்சித்துறை மற்றும் சாக்சீட் ஆலோசனை மையம் இணைந்து நடத்திய முகாமில் டவ் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலர் தாமரை மற்றும் குடும்ப ஆலோசகர் சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூக அறிவியல் மாணவி ரினுதங்கபாண்டியன் செய்திருந்தார்.