விவேகானந்தர் பிறந்த தினப் போட்டி: வென்றோருக்குப் பரிசுகள்

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி கிளை நூலகத்தில் பொங்கல் விழா மற்றும் சுவாமி விவேகானந்தர்

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி கிளை நூலகத்தில் பொங்கல் விழா மற்றும் சுவாமி விவேகானந்தர்
பிறந்த தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கிளை நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், பொது அறிவுப் போட்டிகளும், கோலப் போட்டிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் ஜெ. பிரசாத் தலைமை வகித்தார். திருப்பைஞ்ஞீலி கனரா வங்கியின் கிளை மேலாளர் கிருஷ்ணா, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜான் விக்டர்பால், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டப் பொதுச் செயலர் வே. மாசிலாமணி ஆகியோர் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
மேலும், மூவரும் தலா ரூ.1000 செலுத்தி நூலகப் புரவலாகச் சேர்ந்தனர். விழாவில், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். கிளை நூலகர் வீ. கதிர்வேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com