முக்கொம்பு: ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு

திருச்சி முக்கொம்பு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருச்சி முக்கொம்பு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
 பாலக்கரை காஜாப்பேட்டை  வடக்கு கல்லுக்காரத் தெரு அன்புச்செல்வன் மகன் ராஜேஷ் (10). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
காணும் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் முக்கொம்புக்கு வந்த ராஜேஷ்,  உறவினர்களுடன் காவிரியின் நடுக்கரைப் பகுதியில் படித்துறையில்  குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில்  மூழ்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புப் பணி வீரர்கள் ராஜேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராஜேஷின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து வாய்த்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com