திருச்சி மாநகரில் ஜனவரி 20 மின்தடை

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை  மின் விநியோகம் இருக்காது.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை  மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சு. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்சி நீதிமன்றம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான, வார்னர் சாலை, வில்லியம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, கன்டோன்மென்ட் பகுதிகள், பீமநகர், ஆழ்வார்தோப்பு, சின்னசாமி நகர், ஹீபர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. மின்தடை குறித்த மேலும் விவரங்களுக்கு 1912 அல்லது 1800 425 2912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com