திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை நேரம் அல்லது விடுமுறை தினங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்துவார்களாம். இதனை வருவாய் ஆய்வாளர் யோகராஜா பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (32), முரளி உள்ளிட்ட சிலர் சனிக்கிழமை மாலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மது அருந்தியுள்ளனர். அதனை யோகராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பீர் பாட்டிலை உடைத்து யோகராஜாவை தாக்க முயன்றனர். புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வெங்கடேசனை புதன்கிழமை கைது செய்தனர்.