திருச்சி அருகே  முக்கொம்பு அணையில் மூழ்கி 2 பேர் சாவு

திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு  அணையில் மூழ்கி  இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு  அணையில் மூழ்கி  இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
திருச்சி தென்னூர் ஒத்தமினார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் மகன்  ஷேக் அப்துல்லா (24). இவரது உறவினர் மதுரை சாலை நத்ஹர்வலி தர்ஹா பகுதியைச் சேர்ந்த ரஹமத்துல்லா மகன் முகமது தௌபிக் (13). கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ரமலான் பண்டிகையொட்டி தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் திருச்சி முக்கொம்பு தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
அங்கு குளித்துக்கொண்டிருந்த போது ஷேக் அப்துல்லா, முகமது தௌபிக் இருவரும் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடல்களை மீட்டனர். பின்னர் போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்யவேண்டாம் என கூறிவிட்டு இருவரின் உடல்களையும் உறவினர்களே எடுத்துச் சென்று தென்னூர் பகுதியில் உள்ள ஒரு  மசூதியில் அடக்கம் செய்தனர். உயிரிழந்த  ஷேக் அப்துல்லா டேபிள்  டென்னிஸ் வீரர் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com