துறையூர் அருகே அய்யாற்று மணலை திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல உதவுபவர் மீது விஏஓ சனிக்கிழமை புகார் செய்தார்.
கண்ணனூர் செங்கல் நீர்வட்டப் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் இளமாறன். இவர் தனது வீட்டுக்கு முன்புள்ள சொந்த நிலத்தில் அமைத்துள்ள பாதை வழியாக மணலை வாகனங்களில் திருட்டுத்தனமாக எடுத்துச்செல்ல உடந்தையாக இருப்பதாக தகவல் கிடைத்து, கண்ணனூர் வருவாய் ஆய்வாளர் ஜெஸிமேரி, விஏஓ நவநீதன் நேரில் ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து இளமாறன் மீது நடவடிக்கை கோரி ஜெம்புநாதபுரம் போலீஸில் விஏஓ அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.