ஸ்ரீரங்கம் பகுதி வணிகர்களின் கோரிக்கைக்கு இணங்க தராசு மறுமுத்திரை முகாம் திங்கள்கிழமை ( ஜூன் 18) தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள வணிகர்களின் கோரிக்கைக்கு இணங்க தராசு மறுமுத்திரையிடும் சிறப்பு முகாம் ஜூன் 18 ஆம் தேதி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியலிலுள்ள ஜி.எஸ்.ஆர்.கே. திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறஉள்ளது.
ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருவளர்ச்சோலை, நந்திகோயில்தெரு, கரூர் புறவழிச்சாலை, சிந்தாமணி, உத்தமர்சீலி, கிளிக்கூடு, மாம்பழச்சாலை, சத்திரம் பேருந்து நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் எடையளவுகள் பயன்படுத்தும் வணிகர்கள் தங்கள் நிறுவனத்தில் 2018- காலாண்டில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் மறுமுத்திரையிட வேண்டிய மேடை தராசுகள், மேஜை தராசுகள், மின்னணு தராசுகள், கூம்பிய அளவைகள், தெருபால் மற்றும் எண்ணெய் ஊற்றல் அளவைகள் ஆகியவற்றில் மறுமுத்திரையிடும் பணியை செய்து கொள்ள வேண்டும்.