திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 5ஆவது தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் கணினி அறிவியல், தொழில் நுட்பத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகம், கர்நாடகாவில் உள்ள 35 பொறியியல் கல்லூரியில் இருந்து இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் 118 பேர் பங்கேற்றனர்.
கல்லூரித் தலைவர் பெரியசாமி, முதல்வர் அசோகன், கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை முதன்மையர் யோகப் பிரியா, பேராசிரியர் பாஸ்கர் ஆகியோர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரிப் பேராசிரியர் சரவண பவன் வரவேற்றார். பேராசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார்.