துறையூர் பகுதியில் உள்ள கீரம்பூர், கண்ணனூர் உள்ளிட்ட கிளை நூலகங்களில் நூலக வாரவிழாவையொட்டி வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கீரம்பூர் கிளை நூலகர் ச. நூர் அகமது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதை சொல்லுதல் நிகழ்ச்சியை நடத்தினார். கண்ணனூர் நூலகத்தில் மாணவ மாணவிகள் பார்வையிட புத்தகங்களை, கிளை நூலகர் ஆர். கோவிந்தராஜ் காட்சி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.