சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் திருச்சியை சேர்ந்த கல்லூரிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் பிரிவில் 12 கல்லூரிகளும், மாணவிகள் பிரிவில் 9 கல்லூரிகளும் பங்கேற்றன. இதில், மாணவர்கள் பிரிவில் திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், மாணவிகள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகப் பாரதிதாசன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும் பிடித்தன. இதன் மூலம் மண்டல அளவில் இவ்விரு கல்லூரிகளும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.