அண்ணா பல்கலைக்கழகத் தடகளம்:  திருச்சி கல்லூரிகள் சாம்பியன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில்

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் திருச்சியை சேர்ந்த கல்லூரிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியில்,  மாணவர்கள் பிரிவில் 12 கல்லூரிகளும், மாணவிகள் பிரிவில் 9 கல்லூரிகளும் பங்கேற்றன.  இதில், மாணவர்கள் பிரிவில் திருச்சி ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், மாணவிகள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகப் பாரதிதாசன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும் பிடித்தன. இதன் மூலம் மண்டல அளவில் இவ்விரு கல்லூரிகளும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com