மணப்பாறை கோயிலில் கும்பாபிஷேக விழா

மணப்பாறை அருகே கரையாம்பட்டியில் விநாயகர், காளியம்மன், கருப்பசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை அருகே கரையாம்பட்டியில் விநாயகர், காளியம்மன், கருப்பசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி கோயில் சுமார் ரூ.10 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுகிழமை காலை மங்கல இசையுடன் ஸ்ரீவிக்னேஷ்வர பூஜை, வேதிகார்ச்சனை, திரவிய ஹோமங்கள், நாகதேவதை, கோமாதா, அசுவமேத கஜ பூஜை, யாத்ரா பூர்ணாஹூதி தீபாராதனையுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. 
கோயில் விமானத்திற்கு ராச்சாண்டார் திருமலை மலைக்கோயில் பரம்பரை அர்ச்சகர் கந்தசுப்ரமணிய சிவாச்சாரியாரால் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com