தொட்டியம் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கிய இளைஞர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தொட்டியம் அருகே மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த தனசேகருக்கும், அதேஊரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் மாதேஸ்வரனுக்கும் (23) முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.11) இவர்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், தனசேகர் மனைவி இன்பவள்ளியைத்(42) தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் இன்பவள்ளி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாதேஸ்வரனைக் கைது செய்தனர்.