பாஜகவின் எதிர்கால அரசியல் கனவு பலிக்காது

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் அவர் கூறியதாவது, இந்தியா ஜனநாயக நாடு. இங்கு மக்கள் சொல்வதை அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் கூறுவதே நடக்க வேண்டும் என்றால், அது முடியாத காரியம். காங்கிரஸ் இல்லாத பாரதம், எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்பது வெறும் கற்பனையே. 
பாஜகவின் கற்பனையை மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் தவிடு பொடியாக்கியுள்ளனர். பிரச்னைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பாஜகவினர் தோல்வி அடைந்துள்ளனர். அதற்கான பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com