மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
தும்கூரு மாவட்டம், குனிகல் குட்டய்யனபாளையாவைச் சேர்ந்தவர் நவீன்குமார் (21). இவர் தனது மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை வெளியே சென்று கொண்டிருந்தார். ஹொன்னனஹள்ளியில் அருகே வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நவீன்குமார் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து குனிகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.