கணவர், குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு அல்சூர்கேட் காவல் சரகத்திற்கு உட்பட்ட மைசூரு வங்கி சதுக்கத்தில் உஷாகுமார் என்பவர், புதன்கிழமை மாலை கணவர், குழந்தைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அல்சூர்கேட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.