பெண்ணிடம் நகை பறிப்பு

கணவர், குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

கணவர், குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு அல்சூர்கேட் காவல் சரகத்திற்கு உட்பட்ட மைசூரு வங்கி சதுக்கத்தில் உஷாகுமார் என்பவர், புதன்கிழமை மாலை கணவர், குழந்தைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அல்சூர்கேட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com