கோலார் தங்கவயலில் ஆளில்லாத வீடுகளை அடையாளம் கண்டு திருடி வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோலார் தங்கவயலில் ஆளில்லாத வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஆண்டர்சன் பேட்டை ஜனதா காலனியை சேர்ந்த ராஜேஷ்குமார் (28) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட ராஜேஷ்குமாரிடம் உரிகம் வட்ட போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கஞ்சா விற்றதாக 3 பேர் கைது
பெங்களூரு, நவ. 15: பெங்களூரில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், முசலவாடு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் (23), பாபானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (22), பெங்களூரு பன்னரகட்டா சாலை குருப்பனபாளையாவைச் சேர்ந்தவர் ஜுனேத் அகமது (22). இவர்கள் 3 பேரும் பெங்களூரு மைக்கோ லேஅவுட் பிடிஎம் 2-ஆவது ஸ்டேஜ், வீராஞ்சனேயா கோயில் அருகே கஞ்சா விற்றனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்குச் சென்று விஷ்ணுவர்த்தன், ராஜேஷ், ஜுனேத் அகமது ஆகியோரைக் கைது செய்து, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மைக்கோ லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.