கடன் பிரச்னை காரணமாக கே.ஆர்.பேட்டையை சேர்ந்த தம்பதி தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம், கே.ஆர்.பேட்டை வட்டம், பொம்மனஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி போரலிங்கே கெளடா (60). இவரது மனைவி லக்ஷ்மியம்மா (52). கடன் பிரச்னையால் மனமுடைந்த இத் தம்பதி திங்கள்கிழமை இரவு முத்துராயசாமி கோயில் அருகே உள்ள நிலத்தில் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து கே.ஆர்.பேட்டை ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.