லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (செப். 18) குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் படையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு மாநகர லஞ்ச ஒழிப்புப் படை சார்பில் எலஹங்கா மினி விதானசெளதாவில் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு லஞ்சம், ஊழல் தொடர்பான தங்கள் பிரச்னைகள், குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்- 9480806257, 9480806261 என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.