நிலம் தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், கும்சி கிராமத்தை சேர்ந்தவர் தனது நிலம் தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்து தருமாறு மனு அளித்துள்ளார். இதற்கு சிவமொக்கா வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நில அளவையர் லோஹித் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக பெற்ற லோஹித்தை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.