வேத ஆகம கருத்தரங்கம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பங்கேற்பு

பெங்களூருவில் நடைபெற்ற வேத ஆகம கருத்தரங்கில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பங்கேற்றார்.

பெங்களூருவில் நடைபெற்ற வேத ஆகம கருத்தரங்கில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பங்கேற்றார்.
பெங்களூருவில் செப். 20-ஆம் தேதி நடைபெற்ற வேத ஆகம சம்ஸ்கிருத மஹா பாடசாலை பட்டமளிப்பு விழா மற்றும் வேத ஆகம கருத்தரங்கம் நடைபெற்றது. இதை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, ஆசியுரை வழங்கினார். விழாவில் ஆகம சம்ஸ்கிருத மஹா பாடசாலையில் தேர்ச்சி பெற்ற 35 மாணவர்களுக்கு சிவாகம வித்யாநிதி என்ற பட்டத்துடன் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ கூனப்பட்டி கல்யாணபுரி ஆதீனம் இராஜசரவணமாணிக்கவாசக சுவாமிகள், திருப்பதி திருமலை கோயில் சிறப்பு அலுவலர் என்.முக்தேஸ்வர்ராவ், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் சைலஜா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். வரவேற்புரையை சுந்தரமூர்த்தி சிவமும், நன்றியுரையை மானக் சர்மாவும் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com