மது போதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் தள்ளுவண்டி வியாபாரி இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு அம்ருத்தள்ளி ஒக்கூர் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஜெயராம் (45). தள்ளுவண்டி வியாபாரியான இவர், புதன்கிழமை இரவு தனது வீட்டில் நண்பர் ஷகீலுடன் மது அருந்தியுள்ளார். பின்னர் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ஷகீல் இரும்பு கம்பியால் ஜெயராமைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயராம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஷகீல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்த போலீஸார் வியாழக்கிழமை காலை ஜெயராமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த அம்ருத்தள்ளி போலீஸார், தப்பியோடியுள்ள ஷகீலைத் தேடி வருகின்றனர்.