பாஜக எம்எல்ஏ கார் மோதியதில் 2 பேர் பலி

பாஜக எம்எல்ஏ சி.டி.ரவி பயணம் செய்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாஜக எம்எல்ஏ சி.டி.ரவி பயணம் செய்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சிக்மகளூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ சி.டி.ரவி திங்கள்கிழமை இரவு காரில் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், ஊர்கேனஹள்ளி கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் அதன் அருகே இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருந்த இருவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். 
விசாரணையில் ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், சோரேனஹள்ளியைச் சேர்ந்த சசிகுமார் (28), சுனில்கெளடா (27) என தெரிய வந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு நண்பர்களுடன் தர்மஸ்தலா, சிருங்கேரி உள்ளிட்ட கோயில்களுக்கு காரில் சுற்றுலா சென்ற அவர்கள், சுற்றுலா முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். 
திங்கள்கிழமை நள்ளிரவு காரை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிக்கும் போது எம்.எல்.ஏ சி.டி.ரவி பயணம் செய்த கார் மோதியது. காயமடைந்த சி.டி.ரவி, அவரது கார் ஓட்டுநர் ஆகாஷ், பாதுகாவலர் ராஜுநாயக் ஆகியோர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 
கார் மோதியதில் காயமடைந்த  முனிராஜு, ஜெயசந்திரா, புனித், மஞ்சுநாத் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குனிகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com