சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு- பயிற்சித்துறை சார்பில் சென்னையில்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு- பயிற்சித்துறை சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அத்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளி - ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர். 
இந்த வாரத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. 
இந்த முகாமில் 35-வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம். 
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com