90 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட
குறைதீர் முகாமில் பயனாளிக்கு நலத்திட்டத்துக்கான ஆணையை வழங்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம். உடன், சார் ஆட்சியர் சரண்யா ஹரி உள்ளிட்டோர்.
குறைதீர் முகாமில் பயனாளிக்கு நலத்திட்டத்துக்கான ஆணையை வழங்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம். உடன், சார் ஆட்சியர் சரண்யா ஹரி உள்ளிட்டோர்.


சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 90 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வழங்கினார்.
மத்திய சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகள், ஜாதிச் சான்று, 
வாரிசுச் சான்று, வருமானச் சான்று, பட்டா, பட்டா பெயர் மாற்ற சான்றிதழ்கள் என 90 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வழங்கினார்.
இந்த முகாமில் முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஜாதி மற்றும் இறப்பு சான்றுகள் கோரியும் 220 -க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், மத்திய சென்னை சார் ஆட்சியர் சரண்யா ஹரி, துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com