கால்வாய் தூர்வாரும் பணியில் மனிதர்கள்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகராட்சி


மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தார். மேலும், இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாôர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com